முந்தைய கட்டுரையில் சொன்னது போன்று முதல்ல சண்ட செய்யணும் என்பது மிகவும் முக்கியமான ஒன்று வாய்ப்புகளை பெறுவதற்கும் வெற்றி பெறுவதற்கும். ஆனால் சண்டை செய்வது வெற்றிகானதாக மட்டும் நமக்கு முடிந்து விடுவதில்லை , வாழ்க்கையை நம் தேவைக்கேற்ப வாழ்வதற்கே நாம் சண்டை செய்யவேண்டி உள்ளது. அதற்காக நாம் அன்றாடம் சண்டை செய்ய போவதில்லை ஆனால் எப்பொழுதும் அதை செய்வதற்கான பலம் இருந்து கொண்டே இருக்க வேண்டும்.
உதாரணமாக ஒரு நாடு ராணுவத்தை வைத்திருப்பதற்கான காரணம் தினமும் போர் செய்துக் கொண்டே இருப்பதற்கல்ல, நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் வரும் போதெல்லாம் அதை தற்காகவும் மீண்டும் அது போல் நடக்காமல் இருக்க பதிலடி கொடுக்கவும் தான்.
அதுபோல் தான் ஒரு நாட்டிற்கு ராணுவம் போல , நமக்கு எந்த விஷயத்தை பெறவும் எந்த பிரச்சனையிலும் மாட்டாமல் இருக்கவும் சண்டையிட்டு போராடும் குணத்தையும் வளர்த்துக்கொண்டு இருக்க வேண்டியது அவசியம்.
பிரச்சனைகள் வரும்போது பார்த்துக் கொள்ளலாம் என்பது தவறல்ல , எந்த பிரச்சனை வந்தாலும் அதை எதிர்கொள்வதற்கான திறனை வளர்த்துக் கொள்வது தான் முக்கியம்.
தேங்காய் வேண்டுமென்றால் தென்னை மரம் ஏறி தானே ஆகவேண்டும்? தினமும் ஏறவேண்டும் என்பதில்லை , ஆனால் எற தெரிந்திருந்தால் தான் தேவைப்படும்போது ஏற முடியும்.