மனிதர்கள் ஆதி காலத்தில் சட்டம், ஒழுங்கு முறை என்று எதையும் கடைப் பிடிக்காத காட்டுமிராண்டிகளின் வழித்தோன்றல்கள் தான். அந்த ஆதி காட்டு தீ மெல்லீசாக இன்றும் எரிந்துக் கொண்டு தான் இருக்கிறது, சில மனிதர்களுக்கு அதை பற்றி எரியவைக்க சூழ்நிலைகள் கொடுக்கும் உந்துதல் தான் பெரிய பெரிய வன்முறைகளுக்கு காரணமாக அமைகிறது.
நாம் இப்போது இருக்கும் நாகரீக உயர்வுக்கு முக்கிய காரணம் நமது பரிணாம வளர்ச்சியில் கொஞ்சம் கொஞ்சமாக அனைவருக்கும் சமமான சட்டங்கள், விதிமுறைகள், ஒழுங்குமுறைகள் என்று நாம் புகுத்தி கடைப் பிடித்ததால் தான். அடித்து பிடிங்கி எல்லாம் சாப்பிட முடியாது, பணம் ஈட்ட உழைப்பை செலுத்த வேண்டும், உழைப்புக்காக உடலை அல்லது அறிவை தயார் செய்ய வேண்டும் , இது ஒழுங்குமுறை.
எந்த விஷயத்திலும் ஒரு ஒழுங்கை கடைபிடிக்கவில்லை என்றால் அந்த விஷயம் 100 சதவீதம் முழுமை பெறாது. சிந்திக்கும் போது எந்த கட்டுப்பாடும் இல்லாமல் கற்பனை குதிரையை அனைத்து திசையிலும் அவிழ்த்து விட்டு சிந்திக்கலாம் ஆனால் ஒரு விஷயத்தை செயல்ப் படுத்தும் போது ஒரு ஒழுங்குமுறை கண்டிப்பாக வேண்டும்.
பணம் சம்பாதிப்பது எல்லாராலும் முடியும், வரவு செலவை சரியாக ஒழுங்கு படுத்தி கண்காணித்து கையாண்டால் மட்டுமே அதை சேர்த்து வைத்து பணக்காரர் ஆக முடியும்.